தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4062

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


பாடம் :

அழுக்கான ஆடையைத் துவைத்தல்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தபோது தலைவிரி கோலத்துடன் ஒரு மனிதரை கண்டார்கள். அப்போது, “இவர் தமது முடியைப் படிய வைக்கும் ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ளவில்லையா?” என்று கேட்டார்கள்.

அழுக்கு ஆடையுடன் மற்றொரு மனிதரை அவர்கள் கண்டார்கள். அப்போது, “இவர் தமது ஆடையை துவைப்பதற்கு தண்ணீரை பெற்றுக் கொள்ளவில்லையா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

(அபூதாவூத்: 4062)

بَابٌ فِي غَسْلِ الثَّوْبِ وَفِي الْخُلْقَانِ

حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا مِسْكِينٌ، عَنِ الْأَوْزَاعِيِّ، ح وحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، عَنْ وَكِيعٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، نَحْوَهُ عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ:

أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَى رَجُلًا شَعِثًا قَدْ تَفَرَّقَ شَعْرُهُ فَقَالَ: «أَمَا كَانَ يَجِدُ هَذَا مَا يُسَكِّنُ بِهِ شَعْرَهُ، وَرَأَى رَجُلًا آخَرَ وَعَلْيِهِ ثِيَابٌ وَسِخَةٌ، فَقَالَ أَمَا كَانَ هَذَا يَجِدُ مَاءً يَغْسِلُ بِهِ ثَوْبَهُ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3540.
Abu-Dawood-Shamila-4062.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3542.




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : அபூதாவூத்-4062 , நஸாயீ-5236 , அஹ்மத்-14850 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.