தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1089

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 5

(பயணத் திட்டத்துடன்) ஒருவர் தமது இல்லத்தை விட்டுப் புறப்பட்டதும் கஸ்ர் செய்து தொழலாம்.

அலீ (ரலி) அவர்கள் (கூஃபா நகரிலிருந்து பயணம்) புறப்பட்டுச் செல்லும் போது (உள்ளூரிலுள்ள) வீடுகள் கண்களுக்குத் தெரியும்போதே சுருக்கி (கஸ்ர் செய்து) தொழுதார்கள். திரும்பி வந்த போது இதோ கூஃபா (தெரிகிறது. இனி தொழுகையை சுருக்குவீர்களா? அல்லது முழுமையாக்குவிர்களா?) என்று அவர்களிடம் வினவப்பட்டது. அப்போது அவர்கள் இல்லை! நாம் ஊருக்குள் நுழையும் வரை (சுருக்கியே தொழுவோம்) என்று பதிலளித்தார்கள். 

 அனஸ் (ரலி) அறிவித்தார்

நான் நபி (ஸல்) அவர்களுடன் லுஹர்த் தொழுகையை மதீனாவில் நான்கு ரக்அத்களாகத் தொழுதேன். துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதேன்.

அத்தியாயம்: 18

(புகாரி: 1089)

بَابُ يَقْصُرُ إِذَا خَرَجَ مِنْ مَوْضِعِهِ

وَخَرَجَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ عَلَيْهِ السَّلاَمُ: فَقَصَرَ وَهُوَ يَرَى البُيُوتَ، فَلَمَّا رَجَعَ قِيلَ لَهُ هَذِهِ الكُوفَةُ قَالَ: «لاَ حَتَّى نَدْخُلَهَا»

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، وَإِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

«صَلَّيْتُ الظُّهْرَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَبِذِي الحُلَيْفَةِ رَكْعَتَيْنِ»


Bukhari-Tamil-1089.
Bukhari-TamilMisc-1089.
Bukhari-Shamila-1089.
Bukhari-Alamiah-1027.
Bukhari-JawamiulKalim-1032.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.