தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2024

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 ரமளானின் கடைசிப் பத்தில் புரிய வேண்டிய வணக்கவழிபாடு.

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(ரமளானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்!’
Book : 32

(புகாரி: 2024)

بَابُ العَمَلِ فِي العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي يَعْفُورٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ

«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ العَشْرُ شَدَّ مِئْزَرَهُ، وَأَحْيَا لَيْلَهُ، وَأَيْقَظَ أَهْلَهُ»





3 comments on Bukhari-2024

  1. ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் செய்ய வேண்டிய வழிபாடு குறித்து வரும் இந்த ஹதீஸில் “ شَدَّ مِئْزَرَهُ،” என்ற வார்த்தைக்கு ” இல்லறத் தொடர்பை நிறுத்தி” என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ” வரிந்து கட்டிக்கொண்டு” என்று ஆங்கில மொழி பெயர்ப்பிலும், Dictionary யிலும் உள்ளது.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      شَدَّ مِئْزَرَهُ என்ற வார்த்தைக்கு இரண்டு பொருளும் கொள்ளலாம் என்பதற்கு அரபுக் கவிதைகளில் குறிப்பு உள்ளது. இந்த செய்தியின் விளக்க குறிப்பில் இப்னு ஹஜர் அவர்கள் இதைப் பற்றி கூறியுள்ளார். மேலும் வேறு சில செய்திகளின் மூலம் இங்கு குறிப்பிட்டுள்ள கருத்தே பலமானது என்பதை இப்னு ஹஜர் கூறியுள்ளார்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.