தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3209

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடியானை அல்லாஹ் நேசிக்கும் பொழுது ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே, நீங்களும் அவரை நேசியுங்கள்!’ என்று கூறுவான். எனவே, ஜிப்ரீல் (அலை) அவர்கள் விண்ணகத்தில் வசிப்பவர்களிடம், ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான்; நீங்களும் அவரை நேசியுங்கள்’ என்று அறிவிப்பார்கள்.

உடனே, விண்ணக்கத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்கு பூமியிலும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

வேறோர் அறிவிப்பாளர் அபூ ஆஸிம் (ரஹ்) வழியாகவும் அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே இந்த நபிமொழி அறிவிக்கப்படுகிறது.
Book :59

(புகாரி: 3209)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا مَخْلَدٌ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، قَالَ: قَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَتَابَعَهُ أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

إِذَا أَحَبَّ اللَّهُ العَبْدَ نَادَى جِبْرِيلَ: إِنَّ اللَّهَ يُحِبُّ فُلاَنًا فَأَحْبِبْهُ، فَيُحِبُّهُ جِبْرِيلُ، فَيُنَادِي جِبْرِيلُ فِي أَهْلِ السَّمَاءِ: إِنَّ اللَّهَ يُحِبُّ فُلاَنًا فَأَحِبُّوهُ، فَيُحِبُّهُ أَهْلُ السَّمَاءِ، ثُمَّ يُوضَعُ لَهُ القَبُولُ فِي الأَرْضِ


Bukhari-Tamil-3209.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-3209.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-2988.




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : மாலிக்-2743 , அஹ்மத்-7625 , 8500 , 9352 , 10615 , 10674 , புகாரி-3209 , 6040 , 7485 , முஸ்லிம்-5135 , 5136 , திர்மிதீ-3161 , இப்னு ஹிப்பான்-364 , 365 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.