தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6446 & 6447

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


பாடம் : 15 போதுமென்ற மனமே (உண்மையான) செல்வம். அல்லாஹ் கூறுகின்றான்: நாம் அவர்களுக்கு அதிகமான செல்வத் தையும் ஆண் மக்களையும் அளித்திருப்பது குறித்து (அது நன்மைக்கென) அவர்கள் எண்ணுகின்றனரா? (23:55-63). (23:63ஆவது வசனத்தின் விளக்கவுரை யில்) இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதுவரை அவர்கள் செய்யாத, கட்டாயம் செய்தே தீர வேண்டிய (வேறு பல தீய) செயல்களும் உள்ளன.

6446. & 6447. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்.35

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 81

(புகாரி: 6446 & 6447)

بَابُ الغِنَى غِنَى النَّفْسِ

وَقَوْلُ اللَّهِ تَعَالَى: (أَيَحْسِبُونَ أَنَّ مَا نُمِدُّهُمْ بِهِ مِنْ مَالٍ وَبَنِينَ) – إِلَى قَوْلِهِ تَعَالَى – {مِنْ دُونِ ذَلِكَ هُمْ لَهَا عَامِلُونَ} [المؤمنون: 63] قَالَ ابْنُ عُيَيْنَةَ: «لَمْ يَعْمَلُوهَا، لاَ بُدَّ مِنْ أَنْ يَعْمَلُوهَا»

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا أَبُو حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«لَيْسَ الغِنَى عَنْ كَثْرَةِ العَرَضِ، وَلَكِنَّ الغِنَى غِنَى النَّفْسِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.