தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-682

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்கு வேதனை அதிகமானபோது தொழுகையைப் பற்றி அவர்களிடம் கூறப்பட்டது. ‘அபூ பக்ரை மக்களுக்குத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்’ என்றார்கள். ஆயிஷா(ரலி), ‘அபூ பக்ர் இளகிய உள்ளம் படைத்தவர்; அவர் (குர்ஆனை) ஓதினால் அழுகை அவரை மிகைத்து விடும்’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அவரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்’ என்றார்கள். ஆயிஷா(ரலி) தம் பதிலையே திரும்பச் சொன்னார்கள். நபி(ஸல்) அவர்கள் மீண்டும் ‘அபூ பக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள். நீங்கள் யூஸுஃப் நபியின் தோழிகளாக இருக்கிறீர்கள்’ என்றார்கள்.
Book :10

(புகாரி: 682)

حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ أَخْبَرَهُ، عَنْ أَبِيهِ، قَالَ

لَمَّا اشْتَدَّ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَعُهُ قِيلَ لَهُ فِي الصَّلاَةِ، فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ» قَالَتْ عَائِشَةُ: إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ رَقِيقٌ، إِذَا قَرَأَ غَلَبَهُ البُكَاءُ، قَالَ: «مُرُوهُ فَيُصَلِّي» فَعَاوَدَتْهُ، قَالَ: «مُرُوهُ فَيُصَلِّي، إِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ»

تَابَعَهُ الزُّبَيْدِيُّ، وَابْنُ أَخِي الزُّهْرِيِّ، وَإِسْحَاقُ بْنُ يَحْيَى الكَلْبِيُّ، عَنِ الزُّهْرِيِّ، وَقَالَ عُقَيْلٌ، وَمَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حَمْزَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.