தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-732

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 82

தொழுகையைத் துவக்கும் போது தக்பீர் கூறுவது கட்டாயம். 

 அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் குதிரையில் ஏறிச் சென்றபோது அவர்களின் வலப்பக்கம் பிசகிக் கொண்டது. அன்று ஏதோ ஒரு தொழுகையை உட்கார்ந்து தொழுகை நடத்தினார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்து தொழுதோம். ஸலாம் கொடுத்ததும், ‘இமாம் ஏற்படுத்தப்பட்டிருப்பது அவர் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்காகவே, எனவே அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள். அவர் ருகூவு செய்யும் பொழுது நீங்களும் ருகூவு செய்யுங்கள். அவர் (ருகூவிலிருந்து) நிமிரும்போது நீங்களும் நிமிருங்கள். அவர் ஸஜ்தாச் செய்யும் போது நிங்களும் ஸஜ்தா செய்யுங்கள். அவர் ஸமியல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறும்போது ரப்பனா வலகல் ஹம்து எனக் கூறுங்கள்’ என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அத்தியாயம்: 10

(புகாரி: 732)

أَبْوَابُ صِفَةِ الصَّلاَةِ

بَابُ إِيجَابِ التَّكْبِيرِ، وَافْتِتَاحِ الصَّلاَةِ

حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ الأَنْصَارِيُّ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكِبَ فَرَسًا فَجُحِشَ شِقُّهُ الأَيْمَنُ – قَالَ أَنَسٌ رَضِيَ اللَّهُ عَنْهُ – فَصَلَّى لَنَا يَوْمَئِذٍ صَلاَةً مِنَ الصَّلَوَاتِ وَهُوَ قَاعِدٌ، فَصَلَّيْنَا وَرَاءَهُ قُعُودًا، ثُمَّ قَالَ لَمَّا سَلَّمَ:   إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا، وَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: رَبَّنَا وَلَكَ الحَمْدُ


Bukhari-Tamil-732.
Bukhari-TamilMisc-732.
Bukhari-Shamila-732.
Bukhari-Alamiah-690.
Bukhari-JawamiulKalim-693.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.