தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-5736

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்த நீண்ட ஹதீஸும், அபுல்யசர் (ரலி) அவர்களின் நிகழ்ச்சியும்.

 உபாதா பின் அல்வலீத் பின் உபாதா பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் என் தந்தை (வலீத் பின் உபாதா பின் அஸ்ஸாமித்-ரஹ்) அவர்களும் அன்சாரிகளில் குறிப்பிட்ட ஒரு கிளையாரிடம், அவர்கள் இறப்பதற்குமுன் (அவர்களிடமுள்ள நபிமொழிக்) கல்வியைக் கற்றுக்கொள்வதற்காகப் புறப்பட்டோம். நாங்கள் முதன் முதலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர் அபுல்யசர் (ரலி) அவர்களையே சந்தித்தோம்.

அவர்களுடன் அவர்களுடைய அடிமை ஒருவரும் இருந்தார். அவரிடம் பதிவேடுகளில் ஒரு தொகுப்பும் இருந்தது. அபுல்யசர் (ரலி) அவர்களின் உடலில் போர்வை ஒன்றும் “மஆஃபிர்”எனும் ஊரின் ஆடையொன்றும் இருந்தது. (அதைப் போன்றே) அவர்களுடைய அடிமையின் மீதும் போர்வையொன்றும் “மஆஃபிரீ” ஆடையொன்றும் இருந்தது.

அபுல்யசர் (ரலி) அவர்களிடம் என் தந்தை, “என் தந்தையின் சகோதரரே! நான் தங்களது முகத்தில் கோபத்தின் அறிகுறியைக் காண்கிறேனே?” என்று கேட்டார்கள். அதற்கு அபுல்யசர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆம்; “பனூ ஹராம்” குலத்தைச் சேர்ந்த இன்னாரின் புதல்வர் இன்னார் எனக்குக் கடன் தர வேண்டியிருந்தது. (அதை வசூலிப்பதற்காக) நான் சென்று, அவருடைய வீட்டாருக்கு முகமன் (சலாம்) கூறினேன். பிறகு “அவர் இருக்கிறாரா?”என்று கேட்டேன்.வீட்டார், “இல்லை” என்று விடையளித்தனர். அப்போது பருவவயதை நெருங்கி விட்டிருந்த அவருடைய புதல்வர் ஒருவர் வெளியே வந்தார்.

அவரிடம் நான், “உன் தந்தை எங்கே?” என்று கேட்டேன். அதற்கு அவர், “உங்களின் குரலைக் கேட்டதும் அவர் என் தாயாரின் கட்டிலுக்கடியில் நுழைந்துகொண்டார்” என்று பதிலளித்தார்.

உடனே நான், “நீர் எங்கே இருக்கிறீர் என்பதை நான் அறிந்துகொண்டேன். வெளியே வாரும்” என்றேன். அவர் வெளியே வந்தார்.

நான், “என்னிடமிருந்து ஒளிந்துகொள்ள என்ன காரணம்?” என்று கேட்டேன். அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (உண்மையைச்) சொல்லிவிடுகிறேன். உங்களிடம் பொய் சொல்லமாட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களிடம் பேசும்போது பொய் சொல்லிவிடுவேனோ, அல்லது உங்களுக்கு வாக்களித்துவிட்டு மாறுசெய்துவிடுவேனோ என்றுதான் அஞ்சினேன். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர் ஆவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நெருக்கடியில் இருக்கிறேன்” என்று கூறினார்.

நான், “அல்லாஹ்வின் மீதாணையாகவா” என்று கேட்டேன். அவர் “அல்லாஹ்வின் மீதாணையாகத்தான்” என்றார். நான் (மீண்டும்) “அல்லாஹ்வின் மீதாணையாகவா?” என்று கேட்டேன். அவர் “அல்லாஹ்வின் மீதாணையாகத்தான்” என்றார். நான் (மறுபடியும்) “அல்லாஹ்வின் மீதாணையாகவா?” என்று கேட்டேன். அவர் “அல்லாஹ்வின் மீதாணையாகத் தான்” என்று (மூன்றாவது முறையும்) பதிலளித்தார்.

பிறகு அவர் தமது (கடன்) பத்திரத்தைக் கொண்டுவந்தார். அதை நான் எனது கையால் அழித்துவிட்டேன். பிறகு “கடனைச் செலுத்துவதற்கு ஏதேனும் கிடைத்தால் எனக்குரிய கடனைச் செலுத்தி விடுங்கள். இல்லாவிட்டால், (கடனைச் செலுத்தாமலிருக்க) உங்களுக்கு அனுமதி உண்டு” என்று கூறிவிட்டேன்.

பிறகு அபுல்யசர் (ரலி) அவர்கள் தம் கண்கள்மீது இரு விரல்களை வைத்துப் பின்வருமாறு கூறினார்கள்: இந்த என்னிரு கண்களும் பார்த்தன; இவ்விரு காதுகளும் கேட்டன; (தமது இதயப் பகுதியில் கையை வைத்து) இந்த உள்ளம் மனனமிட்டது. பின்வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சிரமத்திலிருப்பவருக்கு (அவர் தர வேண்டிய கடனுக்கு) அவகாசம் அளிக்கிறாரோ, அல்லது (கடனைத்) தள்ளுபடி செய்துவிடுகிறாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ் தனது நிழலில் நிழல் தருகின்றான்.

அப்போது நான், “என் தந்தையின் சகோதரரே! நீங்கள் உங்கள் அடிமை அணிந்திருக்கும் போர்வையைப் பெற்றுக்கொண்டு உங்களது “மஆஃபிரீ” ஆடையை அவருக்கு அளித்து விட்டாலோ, அல்லது அவரது “மஆஃபிரீ”ஆடையைப் பெற்றுக்கொண்டு உங்களது போர்வையை அவருக்கு அளித்துவிட்டாலோ உங்களுக்கு ஒரு ஜோடி ஆடையும் அவருக்கு ஒரு ஜோடி ஆடையும் கிடைத்து விடுமே!” என்று கேட்டேன்.

அப்போது அபுல்யசர் (ரலி) அவர்கள் (அன்புடன்) என் தலையைத் தடவிவிட்டு, “இறைவா! இ(ச்சிறு)வருக்கு வளம் புரிவாயாக! என் சகோதரரின் புதல்வரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(உங்கள் அடிமைகளான) அவர்களுக்கு நீங்கள் உண்பதிலிருந்து உணவளியுங்கள். நீங்கள் உடுத்துவதிலிருந்தே அவர்களுக்கும் உடை கொடுங்கள்” என்று கூறினார்கள்” என்றார்கள்.

அதை அவர்கள் கூறியபோது, “என் இவ்விரு கண்களும் பார்த்தன; இவ்விரு காதுகளும் கேட்டன; (தமது இதயப்பகுதியில் கையை வைத்து) இதோ இந்த உள்ளம் அதை மனனமிட்டுக் கொண்டது. இவர் மறுமை நாளில் என் நன்மைகளை எடுத்துக் கொள்வதைவிட இவ்வுலகில் பொருட்களை அவருக்கு நான் கொடுப்பது எனக்குச் சுலபமானதே”என்று சொன்னார்கள்.

-பிறகு நாங்கள் (இருவரும்) ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள் தமது பள்ளிவாசலில் ஒரே ஓர் ஆடையை போர்த்திக்கொண்டு தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது நான் மக்களைக் கடந்துசென்று அவர்களுக்கும் “கிப்லா”த் திசைக்குமிடையே அமர்ந்துகொண்டேன்.

அப்போது நான், “அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்! தங்களது மேலாடை தங்களுக்கு அருகில் இருக்கவே,ஒரே ஆடையில் தொழுகிறீர்களே?” என்று கேட்டேன். அப்போது அவர்கள் தம் விரல்களை விரித்து, பின்னர் வில் போன்று வளைத்து, இவ்வாறு என் நெஞ்சில் வைத்துப் பின்வருமாறு கூறினார்கள்: உம்மைப் போன்ற விவரமில்லாதவர் என்னிடம் வந்து, நான் எப்படிச் செய்கிறேன் என்று பார்த்துவிட்டு, அதைப் போன்றே அவரும் செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன். (ஒரு முறை) இந்தப் பள்ளிவாசலில் நாங்கள் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள்.

அப்போது அவர்களது கையில் “இப்னு தாப்” வகை பேரீச்சமரத்தின் பாளை ஒன்று இருந்தது. அப்போது பள்ளிவாசலின் “கிப்லா”த் திசை சுவரில் காறி உமிழப்பட்டிருந்த சளியைக் கண்டார்கள். உடனே அதை அந்தப் பாளையால் சுரண்டிவிட்டார்கள்.

பிறகு எங்களை முன்னோக்கி, “உங்களில் யார் தம்மை இறைவன் புறக்கணிக்க வேண்டும் என விரும்புவார்?” என்று கேட்டார்கள். அதைக் கேட்டு நாங்கள் அஞ்சினோம். பிறகு “உங்களில் யார் தம்மை இறைவன் புறக் கணிக்க வேண்டும் என விரும்புவார்?” என்று (மீண்டும்) கேட்டார்கள். நாங்கள் (மறுபடியும்) அஞ்சினோம்.

பிறகு, “உங்களில் யார் தம்மை இறைவன் புறக்கணிக்க வேண்டுமென விரும்புவார்?” என (மூன்றாவது முறையாகக்) கேட்டார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! இல்லை; எங்களில் எவரும் (அதை விரும்பமாட்டார்)” என்று பதிலளித்தோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவர் தொழுவதற்காக நின்றால், வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் அவரது முகத்துக்கெதிராக இருக்கின்றான். ஆகவே, அவர் தமது முகத்துக்கெதிரே உமிழ வேண்டாம். வலப் பக்கத்திலும் உமிழ வேண்டாம். (மாறாக) தமக்கு இடப்பக்கத்தில் இடக் காலுக்குக் கீழே உமிழ்ந்து (மண்ணால் மூடிக்)கொள்ளட்டும். (தம்மையும் அறியாமல்) சளி முந்திவிட்டால் தமது ஆடையில் இவ்வாறு உமிழ்ந்துகொள்ளட்டும்” என்று கூறி, ஆடையின் ஒரு பகுதியை மற்றொரு பகுதியோடு சேர்த்துக் கசக்கினார்கள்.

“பிறகு நறுமணக் கலவை ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். உடனே இன்ன குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் எழுந்து, தமது வீட்டாரை நோக்கி விரைந்தார். பிறகு தமது கையில் சிறிது நறுமணக் கலவையுடன் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைப் பெற்று அந்தப் பேரீச்சம் பாளையின் நுனியில் வைத்து, பிறகு சளியின் அடையாளம் தெரிந்த அந்த இடத்தில் அதைத் தோய்த்தார்கள். இதை முன்னிட்டே நீங்கள் உங்கள் பள்ளிவாசல்களில் நறுமணங்களை வைக்கும் வழக்கம் தொடங்கியது.

– (தொடர்ந்து ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:)

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (“ஜுஹைனா” குலத்தாரை நோக்கி) “பத்னு புவாத்” போருக்குச் சென்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மஜ்தீ பின் அம்ர் அல்ஜுஹனீ என்பவரைத் தேடினார்கள். அப்(பயணத்தின்)போது ஓர் ஒட்டகத்தில் ஐந்து அல்லது ஆறு அல்லது ஏழு பேர் என முறைவைத்து, ஒருவர் பின் ஒருவராகப் பயணித்தோம். (அந்த அளவுக்கு வாகனப் பற்றாக்குறை இருந்தது.)

இந்த நிலையில் அன்சாரிகளில் ஒருவருடைய முறை வந்தபோது, அவர் தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து அதில் ஏறினார். பிறகு அதைக் கிளப்பினார். ஆனால், அது சிறிது (சண்டித்தனம் செய்து) நின்றுவிட்டது. அப்போது அவர் “ஷஃ” என அதை விரட்டிவிட்டு, “உனக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!” என்று சபித்தார். இதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தமது ஒட்டகத்தைச் சபித்த இந்த மனிதர் யார்?” என்று கேட்டார்கள். “நான்தான், அல்லாஹ்வின் தூதரே!” என்று அந்த அன்சாரி பதிலளித்தார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதிலிருந்து இறங்கிவிடு! சபிக்கப்பட்ட ஒரு பொருளோடு எங்களுடன் நீர் வரவேண்டாம். நீங்கள் உங்களுக்கெதிராகவோ உங்கள் குழந்தைகளுக்கெதிராகவோ உங்கள் செல்வங்களுக்கெதிராகவோ பிரார்த்திக்காதீர்கள். அல்லாஹ்விடம் கேட்டது கொடுக்கப்படும் நேரமாக அது தற்செயலாக அமைந்துவிட்டால், உங்கள் பிரார்த்தனையை அவன் ஏற்றுக்கொள்வான் (அது உங்களுக்குப் பாதகமாக அமைந்துவிடும்)” என்று சொன்னார்கள்.

– (தொடர்ந்து ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:)

நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். ஒரு நாள் மாலை நேரமானபோது நாங்கள் அரபியரின் நீர்நிலையொன்றை நெருங்கினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நமக்கு முன்பே சென்று அங்குள்ள நீர் தொட்டியைச் செப்பனிட்டு, தாமும் நீரருந்தி, நமக்கும் நீர் புகட்டுபவர் யார்?” என்று கேட்டார்கள்.

உடனே நான் எழுந்து, “இந்த மனிதன் (தயாராக இருக்கிறேன்), அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஜாபிருடன் செல்பவர் யார்?” என்று கேட்டார்கள். உடனே ஜப்பார் பின் ஸக்ர் (ரலி) அவர்கள் எழுந்தார்கள். நாங்கள் அந்தக் கிணற்றை நோக்கி நடந்தோம். கிணற்றில் நீரிறைத்து அந்தத் தொட்டிக்குள் ஒரு வாளி,அல்லது இரு வாளித் தண்ணீரை ஊற்றினோம். பிறகு மண்ணைப் பூசி அந்தத் தொட்டியைச் செப்பனிட்டோம். பிறகு கிணற்றிலிருந்து நீரிறைத்து அந்தத் தொட்டியை நிரப்பினோம்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே எங்களிடம் முதலில் வந்தார்கள். எங்களிடம், “நீங்கள் எனக்கு (இதிலுள்ள நீரைப் பயன்படுத்திக்கொள்ள) அனுமதியளிக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம்;அல்லாஹ்வின் தூதரே!” என்றோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தின் தலையைத் தொட்டிக்குள் சரித்தார்கள். அது நீரருந்தியது. அதன் கடிவாளத்தை இறுக்கிப் பிடித்தபோது காலை அகற்றிவைத்து அது சிறுநீர் கழித்தது. பிறகு ஒட்டகத்துடன் திரும்பிச் சென்று அதை மண்டியிட்டுப் படுக்கவைத்தார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தத் தண்ணீர் தொட்டிக்கு வந்து, அதிலிருந்து அங்கத்தூய்மை (உளூ) செய்தார்கள். பிறகு நான் எழுந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத்தூய்மை செய்த இடத்தில் அங்கத்தூய்மை செய்தேன். அப்போது (என்னுடனிருந்த) ஜப்பார் பின் ஸக்ர் (ரலி) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவதற்காக நின்றார்கள். என்மீது போர்வையொன்று இருந்தது. அதன் இரு ஓரங்களையும் பிடித்து தோள்கள்மீது மாற்றிப் போடப்பார்த்தேன். ஆனால், (சிறிதாக இருந்ததால்) அதற்கு வசதிப்படவில்லை. ஆனால், அந்தப் போர்வையில் பல குஞ்சங்கள் இருந்தன. அவற்றை நான் திருப்பிப் போட்டுவிட்டு அதன் இரு ஓரங்களையும் நான் மாற்றிப் போட்டுக்கொண்டேன். பிறகு அந்தப் போர்வையை என் கழுத்தோடு சேர்த்து அணைத்துக் கொண்டேன்.

பிறகு வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப்பக்கத்தில் நின்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்து அப்படியே சுற்றிவரச் செய்து தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள்.

பிறகு ஜப்பார் பின் ஸக்ர் (ரலி) அவர்கள் வந்து அங்கத்தூய்மை செய்துவிட்டுப் பிறகு வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப்பக்கத்தில் நின்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் இருவரின் கைகளைப் பிடித்து எங்களை (பின் வரிசைக்கு) தள்ளினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்றுகொண்டோம்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் அறிந்துகொள்ளாத விதத்தில் என்னை உற்று நோக்கினார்கள். நான் சுதாரித்துக்கொண்டேன். அப்போது “உன் கீழாடையின் நடுப் பகுதியை முடிந்துகொள்” என்று கூறும் விதமாக தமது கையால் சைகை செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், “ஜாபிரே!” என்று அழைத்தார்கள். நான், “சொல்லுங்கள்; அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். “(உனது) ஆடை விசாலமானதாயிருந்தால் அதன் இரு ஓரங்களை வலம் இடமாக மாற்றிப் போட்டுக் கொள். அது சிறியதாக இருந்தால் அதை இடுப்பில் (கீழாடையாக) அணிந்துகொள் (தோள்மீது போட வேண்டியதில்லை)” என்றார்கள்.

– (தொடர்ந்து ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:)

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றோம். அப்போது எங்களில் ஒவ்வொருவருடைய உணவும் நாளொன்றுக்கு ஒரு பேரீச்சம் பழமாகவே இருந்தது. அதை அவர் வாயிலிட்டுச் சுவைத்துவிட்டு, பிறகு அதைத் தமது ஆடையில் முடிந்து வைத்துக்கொள்வார். (அந்தப் பயணத்தில்) நாங்கள் எங்கள் வில்லால் மரங்களிலிருந்து இலைகளை உதிர்த்து அதைச் சாப்பிட்டோம். எந்த அளவுக்கென்றால், (ஒவ்வாமையால்) எங்கள் வாயெல்லாம் புண்ணாகிவிட்டது.

நான் அறுதியிட்டுச் சொல்கிறேன்: ஒரு நாள் ஒரு மனிதருக்கு அவரது பங்கு கிடைக்காமல் விடுபட்டுவிட்டது. (பங்கிட்டுத்தருபவர் கொடுத்துவிட்டதாக எண்ணிக்கொண்டார். (பசியால் சுருண்டு கிடந்த) அவரைத் தூக்கி நிறுத்தி, “அவருக்குப் பேரீச்சம்பழம் கொடுக்கப் படவில்லை” என நாங்கள் சாட்சியம் கூறிய பிறகே அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் எழுந்து அதைப் பெற்றுக்கொண்டார்.

-நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சென்று ஒரு விசாலமான பள்ளத்தாக்கில் இறங்கினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காகச் சென்றார்கள். நான் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மறைந்து இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்கேற்ப (மறைவிடம்) ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தார்கள். அப்படி ஒன்றையும் காணவில்லை.

அப்போது பள்ளத்தாக்கின் ஓரத்தில் இரு மரங்கள் தென்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவற்றில் ஒரு மரத்திற்கு அருகில் சென்று அதன் கிளைகளில் ஒன்றைப் பிடித்து, “அல்லாஹ்வின் ஆணையின்பேரில் எனக்குக் கட்டுப்படு” என்று சொன்னார்கள். ஒட்டகவோட்டியின் கட்டளைக்கு மூக்கணாங்கயிறு இடப்பட்ட ஒட்டகம் கட்டுப்படுவதைப் போன்று, அந்தக் கிளை அவர்களுக்குக் கட்டுப்பட்(டு வளைந்து)விட்டது.

பிறகு இன்னொரு மரத்திற்கு அருகில் சென்று, அதன் கிளைகளில் ஒன்றைப் பிடித்து “அல்லாஹ்வின் ஆணையின்பேரில் எனக்குக் கட்டுப்படு” என்று சொன்னார்கள். முதல் மரத்தைப் போன்றே அதுவும் கட்டுப்பட்டது. அவ்விரண்டுக்கும் மத்தியில் போய் நின்று கொண்டு இரண்டு கிளைகளையும் சேர்த்தார்கள். அப்போது, “அல்லாஹ்வின் ஆணையின்பேரில் எனக்காக ஒன்றிணையுங்கள்” என்று சொன்னார்கள். உடனே அவ்விரண்டும் இணைந்து கொண்டன.

அப்போது நான் அருகிலிருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிந்து (இன்னும்) தொலைதூரத்திற்குச் சென்று (சிரமப்பட்டு)விடுவார்களோ என்று அஞ்சினேன். ஆகவே, நான் அங்கிருந்து விரைவாக (திரும்பி) வந்துவிட்டேன். நான் மனதிற்குள் (ஏதோ) பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில் ஓரக்கண்ணால் நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னோக்கி வந்துகொண்டிருந்தார்கள். (இணைந்திருந்த) அவ்விரு மரங்களும் பிரிந்து ஒவ்வொன்றும் (தனித்தனியே) நிமிர்ந்து நின்றன.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறிது நேரம் நின்று, (இரு பக்கங்களிலும் இருந்த மண்ணறைகளை நோக்கி) தமது தலையால் இவ்வாறு சைகை செய்தார்கள். (அறிவிப்பாளர் அபூஇஸ்மாயீல் (ரஹ்) அவர்கள் தமது தலையை வலம் இடமாக அசைத்து சைகை செய்து காட்டினார்கள்.)

பிறகு முன்னோக்கி வந்தார்கள். என்னிடம் வந்து சேர்ந்ததும், “ஜாபிரே! நான் நின்ற இடத்தை நீ பார்த்தாயா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்; அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின்,நீ அவ்விரு மரங்களை நோக்கிச் சென்று, அவ்விரு மரங்களிலிருந்தும் தலா ஒரு கிளையை உடைத்துக்கொண்டு வா! நான் நிற்கும் இந்த இடத்திற்கு நீ வந்துசேர்ந்ததும், ஒரு கிளையை உனக்கு வலப் பக்கத்திலும் மற்றொரு கிளையை இடப் பக்கத்திலும் வீசிவிடு” என்று சொன்னார்கள்.

ஆகவே, நான் எழுந்து சென்று கல் ஒன்றை எடுத்து, அதை உடைத்து, அதன் மழுங்கிய பகுதியைத் தீட்டினேன். அது கூர்மையானது. பிறகு அந்த மரங்களை நோக்கிச் சென்று அவ்விரு மரங்களிலிருந்தும் தலா ஒரு கிளையை உடைத்தேன்.

பிறகு அவ்விரு கிளைகளையும் இழுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு வந்து நின்று, ஒரு கிளையை எனக்கு வலப்பக்கத்திலும் மற்றொரு கிளையை எனக்கு இடப்பக்கத்திலும் வீசினேன்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அடைந்து, “அல்லாஹ்வின் தூதரே! (நீங்கள் சொன்னபடியே) செய்துவிட்டேன். எதற்காக (அப்படிச் செய்யச் சொன்னீர்கள்)?” என்று கேட்டேன். அதற்கு “நான் இரு மண்ணறைகளை (கப்றுகளை)க் கடந்துவந்தேன். அவற்றிலுள்ள இருவர் வேதனை செய்யப்பட்டுக்கொண்டிருந்தனர். ஆகவே, அவ்விரு கிளைகளும் உலராமல் இருக்கும்வரை அவ்விருவருக்கும் எனது பரிந்துரையின் பேரில் வேதனை இலேசாக்கப்பட வேண்டுமென நான் விரும்பினேன்” என்று கூறினார்கள்.

-பிறகு நாங்கள் படையினரிடம் வந்துசேர்ந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஜாபிரே! அங்கத்தூய்மை செய்ய யாரிடமாவது தண்ணீர் இருக்கிறதா என்று கேள்” என்று சொன்னார்கள். உடனே நான், “அங்கத்தூய்மை செய்ய தண்ணீர் உண்டா? அங்கத் தூய்மை செய்ய தண்ணீர் உண்டா? அங்கத்தூய்மை செய்ய தண்ணீர் உண்டா?” என்று கேட்டேன்.

பிறகு நான், “அல்லாஹ்வின் தூதரே! பயணிகளிடம் ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூட நான் காணவில்லை” என்றேன். அன்சாரிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தம் தோல் பைகளில் தண்ணீர் ஊற்றிவைத்து,அதைக் குளுமையாக்கி, பேரீச்ச மட்டை ஒன்றில் அதைத் தொங்கவிட்டிருப்பார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “நீ இன்ன அன்சாரியின் புதல்வர் இன்ன மனிதரிடம் சென்று,அவருடைய தோல் பைகளில் (தண்ணீர்) ஏதேனும் இருக்கிறதா என்று பார்” என்றார்கள். அவ்வாறே நான் சென்று பார்த்தபோது, அவற்றில் ஒரு பையின் வாய்ப் பகுதியில் இருந்த சிறிது தண்ணீரைத் தவிர வேறெதிலும் தண்ணீரை நான் காணவில்லை. அதை நான் சரித்திருந்தால், அதன் காய்ந்த பகுதிகளே அதை உறிஞ்சிவிட்டிருக்கும்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அவற்றில் ஒரே ஒரு பையின் வாய்ப் பகுதியில் உள்ள சிறிதளவு தண்ணீரைத் தவிர வேறெதிலும் தண்ணீரை நான் காணவில்லை. அதிலுள்ள தண்ணீரை நான் சரித்தால் அதன் உலர்ந்த பகுதிகளே அதை உறிஞ்சிவிட்டிருக்கும்” என்று சொன்னேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ சென்று அதை என்னிடம் கொண்டுவா” என்று சொன்னார்கள். அவ்வாறே அதை நான் கொண்டுவந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையில் வாங்கி, ஏதோ கூறலானார்கள். அது என்ன என்று எனக்குத் தெரியவில்லை. பிறகு அந்தப் பையைத் தம் கரங்களால் அழுத்திப் பிழிந்தார்கள்.

பிறகு என்னிடம் அதைக் கொடுத்து, “ஜாபிரே! பெரிய பாத்திரம் ஒன்றைக் கொண்டு வருமாறு அறிவிப்புச் செய்” என்றார்கள். உடனே “பயணிகளிடம் உள்ள ஒரு பெரிய பாத்திரத்தை (யாரேனும்) கொண்டுவாருங்கள்” என்று அறிவிப்புச்செய்தேன். பாத்திரம் எடுத்துக்கொண்டு வரப்பட்டபோது, அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் வைத்தேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பாத்திரத்தினுள் இவ்வாறு கையைப் பரப்பி, தம் விரல்களை விரித்தார்கள். பிறகு அந்தப் பாத்திரத்தின் அடிப்பகுதியில் கையை வைத்தார்கள். “ஜாபிரே! இதைப் பிடித்துக்கொண்டு,அந்தத் தண்ணீரை என் (கை)மீது ஊற்று! அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறு” என்று சொன்னார்கள்.

அவ்வாறே நான் ஊற்றி, “பிஸ்மில்லாஹ்” என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விரல்களினூடே தண்ணீர் பொங்கிவருவதை நான் கண்டேன். பிறகு பாத்திரத்தில் தண்ணீர் பீறிட்டுச் சுழன்றது. இறுதியில் அது நிரம்பியும்விட்டது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஜாபிரே! தண்ணீர் தேவையுள்ளோரை அழையுங்கள்” என்று கூறினார்கள். (அவ்வாறே நான் அழைத்தேன்.) மக்கள் வந்து தாகம் தீர நீரருந்தினர். பிறகு நான், “தேவையுள்ளோர் யாரேனும் எஞ்சியுள்ளார்களா?” என்று கேட்டேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நிரம்பியிருந்த அந்தப் பாத்திரத்திலிருந்து தமது கையை எடுத்துவிட்டார்கள்.

-மக்கள் (“சீஃபுல் பஹ்ர்” படையினர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தங்களுக்குப் பசி ஏற்பட்டுள்ளதாக முறையிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உங்களுக்கு உணவளிக்கக்கூடும்” என்றார்கள். பிறகு நாங்கள் கடலோரத்திற்குச் சென்றோம். அப்போது கடல் அலை எழுந்து (பெரிய கடல்வாழ்) உயிரினம் (திமிங்கலம்) ஒன்றை (கரையில்) போட்டது.

உடனே நாங்கள் அதனருகில் நெருப்பு மூட்டி சமைத்தோம்; பொறித்தோம். வயிறு நிரம்ப உண்டோம். பிறகு நானும் இன்ன மனிதரும் இன்ன மனிதரும் -ஐந்து பேரை எண்ணிக் குறிப்பிட்டு -அந்த மீனின் கண்ணெலும்புக்குள் நுழைந்தோம். எங்களை யாரும் பார்க்கவில்லை. பிறகு நாங்கள் வெளியே வந்தோம். (அந்த அளவுக்கு அதன் கண்ணெலும்பு பெரியதாக இருந்தது)

பிறகு அதன் விலாஎலும்புகளில் ஒன்றை எடுத்து, அதை வில் போல வளைத்து வைத்தோம். பயணிகளிடையே இருந்த மிகப் பெரிய மனிதர் ஒருவரையும், பயணிகளிடையேயிருந்த பெரிய ஒட்டகம் ஒன்றையும், பயணிகளிடையே இருந்த திமிலைப் போர்த்தி மூடும் துணியொன்றையும் கொண்டுவரச்செய்தோம். (அதை அந்த ஒட்டகத்தின் மீது போர்த்தி அந்தப் பெரிய மனிதரை அதிலேற்றிவிட்டோம்.) அவர் அந்த விலா எலும்புக்குக் கீழே தமது தலையைத் தாழ்த்தாமல் நுழைந்து சென்றார் (அந்த அளவுக்கு அதன் எலும்பு பெரியதாக இருந்தது).

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 53

(முஸ்லிம்: 5736)

18 – بَابُ حَدِيثِ جَابِرٍ الطَّوِيلِ وَقِصَّةِ أَبِي الْيَسَرِ

حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، وَمُحَمَّدُ بْنُ عَبَّادٍ – وَتَقَارَبَا فِي لَفْظِ الْحَدِيثِ، وَالسِّيَاقُ لِهَارُونَ – قَالَا: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ يَعْقُوبَ بْنِ مُجَاهِدٍ أَبِي حَزْرَةَ، عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ

خَرَجْتُ أَنَا وَأَبِي نَطْلُبُ الْعِلْمَ فِي هَذَا الْحَيِّ مِنَ الْأَنْصَارِ، قَبْلَ أَنْ يَهْلِكُوا، فَكَانَ أَوَّلُ مَنْ لَقِينَا أَبَا الْيَسَرِ، صَاحِبَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَعَهُ غُلَامٌ لَهُ، مَعَهُ ضِمَامَةٌ مِنْ صُحُفٍ، وَعَلَى أَبِي الْيَسَرِ بُرْدَةٌ وَمَعَافِرِيَّ، وَعَلَى غُلَامِهِ بُرْدَةٌ وَمَعَافِرِيَّ، فَقَالَ لَهُ أَبِي: يَا عَمِّ إِنِّي أَرَى فِي وَجْهِكَ سَفْعَةً مِنْ غَضَبٍ، قَالَ: أَجَلْ، كَانَ لِي عَلَى فُلَانِ ابْنِ فُلَانٍ الْحَرَامِيِّ مَالٌ، فَأَتَيْتُ أَهْلَهُ، فَسَلَّمْتُ، فَقُلْتُ: ثَمَّ هُوَ؟ قَالُوا: لَا، فَخَرَجَ عَلَيَّ ابْنٌ لَهُ جَفْرٌ، فَقُلْتُ لَهُ: أَيْنَ أَبُوكَ؟ قَالَ: سَمِعَ صَوْتَكَ فَدَخَلَ أَرِيكَةَ أُمِّي، فَقُلْتُ: اخْرُجْ إِلَيَّ، فَقَدْ عَلِمْتُ أَيْنَ أَنْتَ، فَخَرَجَ، فَقُلْتُ: مَا حَمَلَكَ عَلَى أَنِ اخْتَبَأْتَ مِنِّي؟ قَالَ: أَنَا، وَاللهِ أُحَدِّثُكَ، ثُمَّ لَا أَكْذِبُكَ، خَشِيتُ وَاللهِ أَنْ أُحَدِّثَكَ فَأَكْذِبَكَ، وَأَنْ أَعِدَكَ فَأُخْلِفَكَ، وَكُنْتَ صَاحِبَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكُنْتُ وَاللهِ مُعْسِرًا قَالَ: قُلْتُ: آللَّهِ قَالَ: اللهِ قُلْتُ: آللَّهِ قَالَ: اللهِ قُلْتُ: آللَّهِ قَالَ: اللهِ قَالَ: فَأَتَى بِصَحِيفَتِهِ فَمَحَاهَا بِيَدِهِ، فَقَالَ: إِنْ وَجَدْتَ قَضَاءً فَاقْضِنِي، وَإِلَّا، أَنْتَ فِي حِلٍّ، فَأَشْهَدُ بَصَرُ عَيْنَيَّ هَاتَيْنِ – وَوَضَعَ إِصْبَعَيْهِ عَلَى عَيْنَيْهِ – وَسَمْعُ أُذُنَيَّ هَاتَيْنِ، وَوَعَاهُ قَلْبِي هَذَا – وَأَشَارَ إِلَى مَنَاطِ قَلْبِهِ – رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ: «مَنْ أَنْظَرَ مُعْسِرًا أَوْ وَضَعَ عَنْهُ، أَظَلَّهُ اللهُ فِي ظِلِّهِ»

قَالَ: فَقُلْتُ لَهُ أَنَا: يَا عَمِّ لَوْ أَنَّكَ أَخَذْتَ بُرْدَةَ غُلَامِكَ، وَأَعْطَيْتَهُ مَعَافِرِيَّكَ، وَأَخَذْتَ مَعَافِرِيَّهُ وَأَعْطَيْتَهُ بُرْدَتَكَ، فَكَانَتْ عَلَيْكَ حُلَّةٌ وَعَلَيْهِ حُلَّةٌ، فَمَسَحَ رَأْسِي، وَقَالَ: اللهُمَّ بَارِكْ فِيهِ، يَا ابْنَ أَخِي بَصَرُ عَيْنَيَّ هَاتَيْنِ، وَسَمْعُ أُذُنَيَّ هَاتَيْنِ، وَوَعَاهُ قَلْبِي هَذَا – وَأَشَارَ إِلَى مَنَاطِ قَلْبِهِ – رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ: «أَطْعِمُوهُمْ مِمَّا تَأْكُلُونَ، وَأَلْبِسُوهُمْ مِمَّا تَلْبَسُونَ» وَكَانَ أَنْ أَعْطَيْتُهُ مِنْ مَتَاعِ الدُّنْيَا أَهْوَنَ عَلَيَّ مِنْ أَنْ يَأْخُذَ مِنْ حَسَنَاتِي يَوْمَ الْقِيَامَةِ

ثُمَّ مَضَيْنَا حَتَّى أَتَيْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللهِ فِي مَسْجِدِهِ، وَهُوَ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ مُشْتَمِلًا بِهِ، فَتَخَطَّيْتُ الْقَوْمَ حَتَّى جَلَسْتُ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ، فَقُلْتُ: يَرْحَمُكَ اللهُ أَتُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ وَرِدَاؤُكَ إِلَى جَنْبِكَ؟ قَالَ: فَقَالَ بِيَدِهِ فِي صَدْرِي هَكَذَا، وَفَرَّقَ بَيْنَ أَصَابِعِهِ وَقَوَّسَهَا: أَرَدْتُ أَنْ يَدْخُلَ عَلَيَّ الْأَحْمَقُ مِثْلُكَ، فَيَرَانِي كَيْفَ أَصْنَعُ، فَيَصْنَعُ مِثْلَهُ، أَتَانَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسْجِدِنَا هَذَا، وَفِي يَدِهِ عُرْجُونُ ابْنِ طَابٍ، فَرَأَى فِي قِبْلَةِ الْمَسْجِدِ نُخَامَةً فَحَكَّهَا بِالْعُرْجُونِ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا فَقَالَ: «أَيُّكُمْ يُحِبُّ أَنْ يُعْرِضَ اللهُ عَنْهُ؟» قَالَ فَخَشَعْنَا، ثُمَّ قَالَ: «أَيُّكُمْ يُحِبُّ أَنْ يُعْرِضَ اللهُ عَنْهُ؟» قَالَ: فَخَشَعْنَا، ثُمَّ قَالَ: «أَيُّكُمْ يُحِبُّ أَنْ يُعْرِضَ اللهُ عَنْهُ؟» قُلْنَا: لَا أَيُّنَا، يَا رَسُولَ اللهِ قَالَ: «فَإِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ يُصَلِّي، فَإِنَّ اللهَ تَبَارَكَ وَتَعَالَى قِبَلَ وَجْهِهِ، فَلَا يَبْصُقَنَّ قِبَلَ وَجْهِهِ، وَلَا عَنْ يَمِينِهِ، وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ، تَحْتَ رِجْلِهِ الْيُسْرَى، فَإِنْ عَجِلَتْ بِهِ بَادِرَةٌ [ص:2304] فَلْيَقُلْ بِثَوْبِهِ هَكَذَا» ثُمَّ طَوَى ثَوْبَهُ بَعْضَهُ عَلَى بَعْضٍ، فَقَالَ: «أَرُونِي عَبِيرًا» فَقَامَ فَتًى مِنَ الْحَيِّ يَشْتَدُّ إِلَى أَهْلِهِ، فَجَاءَ بِخَلُوقٍ فِي رَاحَتِهِ، فَأَخَذَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَهُ عَلَى رَأْسِ الْعُرْجُونِ، ثُمَّ لَطَخَ بِهِ عَلَى أَثَرِ النُّخَامَةِ، فَقَالَ جَابِرٌ: فَمِنْ هُنَاكَ جَعَلْتُمُ الْخَلُوقَ فِي مَسَاجِدِكُمْ

سِرْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ بَطْنِ بُوَاطٍ، وَهُوَ يَطْلُبُ الْمَجْدِيَّ بْنَ عَمْرٍو الْجُهَنِيَّ، وَكَانَ النَّاضِحُ يَعْتَقِبُهُ مِنَّا الْخَمْسَةُ وَالسِّتَّةُ وَالسَّبْعَةُ، فَدَارَتْ عُقْبَةُ رَجُلٍ مِنَ الْأَنْصَارِ عَلَى نَاضِحٍ لَهُ، فَأَنَاخَهُ فَرَكِبَهُ، ثُمَّ بَعَثَهُ فَتَلَدَّنَ عَلَيْهِ بَعْضَ التَّلَدُّنِ، فَقَالَ لَهُ: شَأْ، لَعَنَكَ اللهُ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ هَذَا اللَّاعِنُ بَعِيرَهُ؟» قَالَ: أَنَا، يَا رَسُولَ اللهِ قَالَ: «انْزِلْ عَنْهُ، فَلَا تَصْحَبْنَا بِمَلْعُونٍ، لَا تَدْعُوا عَلَى أَنْفُسِكُمْ، وَلَا تَدْعُوا عَلَى أَوْلَادِكُمْ، وَلَا تَدْعُوا عَلَى أَمْوَالِكُمْ، لَا تُوَافِقُوا مِنَ اللهِ سَاعَةً يُسْأَلُ فِيهَا عَطَاءٌ، فَيَسْتَجِيبُ لَكُمْ»

سِرْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى إِذَا كَانَتْ عُشَيْشِيَةٌ وَدَنَوْنَا مَاءً مِنْ مِيَاهِ الْعَرَبِ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ رَجُلٌ يَتَقَدَّمُنَا فَيَمْدُرُ الْحَوْضَ فَيَشْرَبُ وَيَسْقِينَا؟» قَالَ جَابِرٌ: فَقُمْتُ فَقُلْتُ: هَذَا رَجُلٌ، يَا رَسُولَ اللهِ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّ رَجُلٍ مَعَ جَابِرٍ؟» فَقَامَ جَبَّارُ بْنُ صَخْرٍ، فَانْطَلَقْنَا إِلَى الْبِئْرِ، فَنَزَعْنَا فِي الْحَوْضِ سَجْلًا أَوْ سَجْلَيْنِ، ثُمَّ مَدَرْنَاهُ، ثُمَّ نَزَعْنَا فِيهِ حَتَّى أَفْهَقْنَاهُ، فَكَانَ أَوَّلَ طَالِعٍ عَلَيْنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَتَأْذَنَانِ؟» قُلْنَا: نَعَمْ، يَا رَسُولَ اللهِ فَأَشْرَعَ نَاقَتَهُ فَشَرِبَتْ، شَنَقَ لَهَا فَشَجَتْ فَبَالَتْ، ثُمَّ عَدَلَ بِهَا فَأَنَاخَهَا، ثُمَّ جَاءَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْحَوْضِ فَتَوَضَّأَ مِنْهُ، ثُمَّ قُمْتُ فَتَوَضَّأْتُ مِنْ مُتَوَضَّإِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَهَبَ جَبَّارُ بْنُ صَخْرٍ يَقْضِي حَاجَتَهُ، فَقَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُصَلِّيَ، وَكَانَتْ عَلَيَّ بُرْدَةٌ ذَهَبْتُ أَنْ أُخَالِفَ بَيْنَ طَرَفَيْهَا فَلَمْ تَبْلُغْ لِي، وَكَانَتْ لَهَا ذَبَاذِبُ فَنَكَّسْتُهَا، ثُمَّ خَالَفْتُ بَيْنَ طَرَفَيْهَا، ثُمَّ تَوَاقَصْتُ عَلَيْهَا، ثُمَّ جِئْتُ حَتَّى قُمْتُ عَنْ يَسَارِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخَذَ بِيَدِي فَأَدَارَنِي حَتَّى أَقَامَنِي عَنْ يَمِينِهِ، ثُمَّ جَاءَ جَبَّارُ بْنُ صَخْرٍ فَتَوَضَّأَ، ثُمَّ جَاءَ فَقَامَ عَنْ يَسَارِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَأَخَذَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيْنَا جَمِيعًا، فَدَفَعَنَا حَتَّى أَقَامَنَا خَلْفَهُ، فَجَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْمُقُنِي وَأَنَا لَا أَشْعُرُ، ثُمَّ فَطِنْتُ بِهِ، فَقَالَ هَكَذَا، بِيَدِهِ – يَعْنِي شُدَّ وَسَطَكَ – فَلَمَّا فَرَغَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «يَا جَابِرُ» قُلْتُ: لَبَّيْكَ، يَا رَسُولَ اللهِ قَالَ: «إِذَا كَانَ وَاسِعًا فَخَالِفْ بَيْنَ طَرَفَيْهِ، وَإِذَا كَانَ ضَيِّقًا فَاشْدُدْهُ عَلَى حَقْوِكَ»

«سِرْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ قُوتُ كُلِّ رَجُلٍ مِنَّا فِي كُلِّ يَوْمٍ تَمْرَةً، فَكَانَ يَمَصُّهَا ثُمَّ يَصُرُّهَا فِي ثَوْبِهِ، وَكُنَّا نَخْتَبِطُ بِقِسِيِّنَا وَنَأْكُلُ، حَتَّى قَرِحَتْ أَشْدَاقُنَا، فَأُقْسِمُ أُخْطِئَهَا رَجُلٌ مِنَّا يَوْمًا، فَانْطَلَقْنَا بِهِ نَنْعَشُهُ، فَشَهِدْنَا أَنَّهُ لَمْ يُعْطَهَا، فَأُعْطِيَهَا فَقَامَ فَأَخَذَهَا»

سِرْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى نَزَلْنَا وَادِيًا أَفْيَحَ، فَذَهَبَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْضِي حَاجَتَهُ، فَاتَّبَعْتُهُ بِإِدَاوَةٍ مِنْ مَاءٍ، فَنَظَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَرَ شَيْئًا يَسْتَتِرُ بِهِ، فَإِذَا شَجَرَتَانِ بِشَاطِئِ الْوَادِي، فَانْطَلَقَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى إِحْدَاهُمَا، فَأَخَذَ بِغُصْنٍ مِنْ أَغْصَانِهَا [ص:2307]، فَقَالَ: «انْقَادِي عَلَيَّ بِإِذْنِ اللهِ» فَانْقَادَتْ مَعَهُ كَالْبَعِيرِ الْمَخْشُوشِ، الَّذِي يُصَانِعُ قَائِدَهُ، حَتَّى أَتَى الشَّجَرَةَ الْأُخْرَى، فَأَخَذَ بِغُصْنٍ مِنْ أَغْصَانِهَا، فَقَالَ: «انْقَادِي عَلَيَّ بِإِذْنِ اللهِ» فَانْقَادَتْ مَعَهُ كَذَلِكَ، حَتَّى إِذَا كَانَ بِالْمَنْصَفِ مِمَّا بَيْنَهُمَا، لَأَمَ بَيْنَهُمَا – يَعْنِي جَمَعَهُمَا – فَقَالَ: «الْتَئِمَا عَلَيَّ بِإِذْنِ اللهِ» فَالْتَأَمَتَا، قَالَ جَابِرٌ: فَخَرَجْتُ أُحْضِرُ مَخَافَةَ أَنْ يُحِسَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقُرْبِي فَيَبْتَعِدَ – وَقَالَ مُحَمَّدُ بْنُ عَبَّادٍ – فَيَتَبَعَّدَ فَجَلَسْتُ أُحَدِّثُ نَفْسِي، فَحَانَتْ مِنِّي لَفْتَةٌ، فَإِذَا أَنَا بِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُقْبِلًا، وَإِذَا الشَّجَرَتَانِ قَدِ افْتَرَقَتَا، فَقَامَتْ كُلُّ وَاحِدَةٍ مِنْهُمَا عَلَى سَاقٍ، فَرَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَفَ وَقْفَةً، فَقَالَ بِرَأْسِهِ هَكَذَا – وَأَشَارَ أَبُو إِسْمَاعِيلَ بِرَأْسِهِ يَمِينًا وَشِمَالًا – ثُمَّ أَقْبَلَ، فَلَمَّا انْتَهَى إِلَيَّ قَالَ: «يَا جَابِرُ هَلْ رَأَيْتَ مَقَامِي؟» قُلْتُ: نَعَمْ، يَا رَسُولَ اللهِ قَالَ: «فَانْطَلِقْ إِلَى الشَّجَرَتَيْنِ فَاقْطَعْ مِنْ كُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا غُصْنًا، فَأَقْبِلْ بِهِمَا، حَتَّى إِذَا قُمْتَ مَقَامِي فَأَرْسِلْ غُصْنًا عَنْ يَمِينِكَ وَغُصْنًا عَنْ يَسَارِكَ»، قَالَ جَابِرٌ: فَقُمْتُ فَأَخَذْتُ حَجَرًا فَكَسَرْتُهُ وَحَسَرْتُهُ، فَانْذَلَقَ لِي، فَأَتَيْتُ الشَّجَرَتَيْنِ فَقَطَعْتُ مِنْ كُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا غُصْنًا، ثُمَّ أَقْبَلْتُ أَجُرُّهُمَا حَتَّى قُمْتُ مَقَامَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَرْسَلْتُ غُصْنًا عَنْ يَمِينِي وَغُصْنًا عَنْ يَسَارِي، ثُمَّ لَحِقْتُهُ، فَقُلْتُ: قَدْ فَعَلْتُ، يَا رَسُولَ اللهِ فَعَمَّ ذَاكَ؟ قَالَ: «إِنِّي مَرَرْتُ بِقَبْرَيْنِ يُعَذَّبَانِ، فَأَحْبَبْتُ، بِشَفَاعَتِي، أَنْ يُرَفَّهَ عَنْهُمَا، مَا دَامَ الْغُصْنَانِ رَطْبَيْنِ»

قَالَ: فَأَتَيْنَا الْعَسْكَرَ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا جَابِرُ نَادِ بِوَضُوءٍ» فَقُلْتُ: أَلَا وَضُوءَ؟ أَلَا وَضُوءَ؟ أَلَا وَضُوءَ؟ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ مَا وَجَدْتُ فِي الرَّكْبِ مِنْ قَطْرَةٍ، وَكَانَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ يُبَرِّدُ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَاءَ فِي أَشْجَابٍ لَهُ، عَلَى حِمَارَةٍ مِنْ جَرِيدٍ، قَالَ: فَقَالَ لِيَ: «انْطَلِقْ إِلَى فُلَانِ ابْنِ فُلَانٍ الْأَنْصَارِيِّ، فَانْظُرْ هَلْ فِي أَشْجَابِهِ مِنْ شَيْءٍ؟» قَالَ: فَانْطَلَقْتُ إِلَيْهِ فَنَظَرْتُ فِيهَا فَلَمْ أَجِدْ فِيهَا إِلَّا قَطْرَةً فِي عَزْلَاءِ شَجْبٍ مِنْهَا، لَوْ أَنِّي أُفْرِغُهُ لَشَرِبَهُ يَابِسُهُ، فَأَتَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ إِنِّي لَمْ أَجِدْ فِيهَا إِلَّا قَطْرَةً فِي عَزْلَاءِ شَجْبٍ مِنْهَا، لَوْ أَنِّي أُفْرِغُهُ لَشَرِبَهُ يَابِسُهُ، قَالَ: «اذْهَبْ فَأْتِنِي بِهِ» فَأَتَيْتُهُ بِهِ، فَأَخَذَهُ بِيَدِهِ فَجَعَلَ يَتَكَلَّمُ بِشَيْءٍ لَا أَدْرِي مَا هُوَ، وَيَغْمِزُهُ بِيَدَيْهِ، ثُمَّ أَعْطَانِيهِ، فَقَالَ: «يَا جَابِرُ نَادِ بِجَفْنَةٍ» فَقُلْتُ: يَا جَفْنَةَ الرَّكْبِ فَأُتِيتُ بِهَا تُحْمَلُ، فَوَضَعْتُهَا بَيْنَ يَدَيْهِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: بِيَدِهِ فِي الْجَفْنَةِ هَكَذَا، فَبَسَطَهَا وَفَرَّقَ بَيْنَ أَصَابِعِهِ، ثُمَّ وَضَعَهَا فِي قَعْرِ الْجَفْنَةِ، وَقَالَ: «خُذْ يَا جَابِرُ فَصُبَّ عَلَيَّ، وَقُلْ بِاسْمِ اللهِ» فَصَبَبْتُ عَلَيْهِ وَقُلْتُ: بِاسْمِ اللهِ، فَرَأَيْتُ الْمَاءَ يَتَفُوَّرُ مِنْ بَيْنِ أَصَابِعِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ فَارَتْ الْجَفْنَةُ وَدَارَتْ حَتَّى امْتَلَأَتْ، فَقَالَ: «يَا جَابِرُ نَادِ مَنْ كَانَ لَهُ حَاجَةٌ بِمَاءٍ» قَالَ فَأَتَى النَّاسُ فَاسْتَقَوْا حَتَّى رَوُوا، قَالَ: فَقُلْتُ: هَلْ بَقِيَ أَحَدٌ لَهُ حَاجَةٌ؟ فَرَفَعَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ مِنَ الْجَفْنَةِ وَهِيَ مَلْأَى

وَشَكَا النَّاسُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجُوعَ، فَقَالَ: «عَسَى اللهُ أَنْ يُطْعِمَكُمْ» فَأَتَيْنَا سِيفَ الْبَحْرِ فَزَخَرَ الْبَحْرُ زَخْرَةً، فَأَلْقَى دَابَّةً، فَأَوْرَيْنَا عَلَى شِقِّهَا النَّارَ، فَاطَّبَخْنَا وَاشْتَوَيْنَا، وَأَكَلْنَا حَتَّى شَبِعْنَا، قَالَ جَابِرٌ: فَدَخَلْتُ أَنَا وَفُلَانٌ وَفُلَانٌ، حَتَّى عَدَّ خَمْسَةً، فِي حِجَاجِ عَيْنِهَا مَا يَرَانَا أَحَدٌ، حَتَّى خَرَجْنَا، فَأَخَذْنَا ضِلَعًا مِنْ أَضْلَاعِهِ فَقَوَّسْنَاهُ، ثُمَّ دَعَوْنَا بِأَعْظَمِ رَجُلٍ فِي الرَّكْبِ، وَأَعْظَمِ جَمَلٍ فِي الرَّكْبِ، وَأَعْظَمِ كِفْلٍ فِي الرَّكْبِ، فَدَخَلَ تَحْتَهُ مَا يُطَأْطِئُ رَأْسَهُ


Tamil-5736
Shamila-3006,
3007,
3008,
3009,
3010,
3011,
3012,
3013,
3014
JawamiulKalim-5332,
5333




இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-594 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.