தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3474

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஃபஜ்ரு தொழுகைக்கு பின், யாரிடமும் பேசாமல் (கால்களை அகற்றாமல்) இருப்பில் அமர்ந்தவாறு “லாஇலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல், முல்க்கு வ லஹுல், ஹம்து, யுஹ்யீ வ யுமீத்து வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்.

(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன்)

என்று பத்து முறை சொல்கிறவருக்கு பத்து நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் புரிந்த) பத்து தீமைகள் அழிக்கப்படும். சொர்க்கத்தில் அவருக்கு பத்து அந்தஸ்துகள் உயர்த்தப்படும்.  அந்த நாள் முழுதும் தீங்கிலிருந்து அவருக்கு பாதுகாப்பு கிடைக்கும். மேலும் அவர் ஷைத்தானிடமிருந்தும் பாதுகாக்கப்படுவார். அந்த நாளில் அல்லாஹ்விற்கு இணைவைக்கும் பாவத்தை தவிர வேறு எந்த பாவமும்  அவரை அழித்துவிடாது.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

(திர்மதி: 3474)

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو الرَّقِّيُّ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ، عَنْ أَبِي ذَرٍّ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” مَنْ قَالَ فِي دُبُرِ صَلَاةِ الفَجْرِ وَهُوَ ثَانٍ رِجْلَيْهِ قَبْلَ أَنْ يَتَكَلَّمَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ عَشْرَ مَرَّاتٍ، كُتِبَتْ لَهُ عَشْرُ حَسَنَاتٍ، وَمُحِيَ عَنْهُ عَشْرُ سَيِّئَاتٍ، وَرُفِعَ لَهُ عَشْرُ دَرَجَاتٍ، وَكَانَ يَوْمَهُ ذَلِكَ كُلَّهُ فِي حِرْزٍ مِنْ كُلِّ مَكْرُوهٍ، وَحُرِسَ مِنَ الشَّيْطَانِ، وَلَمْ يَنْبَغِ لِذَنْبٍ أَنْ يُدْرِكَهُ فِي ذَلِكَ اليَوْمِ إِلَّا الشِّرْكَ بِاللَّهِ

«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3396.
Tirmidhi-Shamila-3474.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3421.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஷஹ்ர் பின் ஹவ்ஷப் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

1 . இந்தக் கருத்தில் அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : திர்மிதீ-3474 , முஸ்னத் பஸ்ஸார்-4050 , குப்ரா நஸாயீ-9878 ,

மேற்கண்ட திக்ரின் சிறப்பு பற்றி சரியான ஹதீஸ்களும் வந்துள்ளன.

2 . அபூ ஹுரைரா(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : புகாரி-3293 .

3 . அபூ அய்யூப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-23568 .

4 . அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி)  வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : முஸ்லிம்-1041 .

…………

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.